குமராட்சியில் தொழிலாளர் சங்க கிளை அமைப்பு கூட்டம்

நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-17 12:32 GMT

குமராட்சியில் தொழிலாளர் சங்க கிளை அமைப்பு கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிளை அமைப்பு கூட்டம் கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பூலாமேடு கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மெயின் ரோட்டில் இருந்து குடியிருக்கும் பகுதி சேரும் சகதியமாய் இருக்கும் சாலையை சீரமைத்து புதிய சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும், ஆபத்தான நிலையில் சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்திடு, மின் கம்பிகளை மாற்றிடு, குடிசை வீடுகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டிடட அனுமதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் மனு கொடுத்து நிறைவேறா விட்டால் மக்களை திரட்டி தீரத்துடன் போராடுவோம் என உறுதியளித்துள்ளனர்.
Tags:    

Similar News