மதுராந்தகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் செயற்குழு கூட்டம்

மதுராந்தகத்தில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் செயற்குழு கூட்டத்தில காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2024-06-17 05:32 GMT

செயற்குழு கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயற்குழு கூட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், திமுக கட்சி நிர்வாகிகளும், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்புடன் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட செல்வத்தை இரண்டாவது முறையாக 2.21 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்கள் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் திமுக, இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து நாடாளுமன்ற பொது தேர்தலில் மகத்தான கூட்டணியை உருவாக்கி 40க்கு 40 என்று வெற்றி பெற திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கும், கூட்டணிக் கட்சியின் தலைவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கட்சியை சேர்ந்த அன்னியூர் சிவா வெற்றி பெற நம்முடைய கூட்டணியின் சார்பிலே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், ஒன்றிய செயலாளர் பொன் சிவக்குமார், நகர செயலாளர் குமார் உள்ளிட்ட மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி கட்சியின் மாநகர, நகர, ஒன்றிய பகுதி பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News