ஒருங்கிணைந்த சேவை மையம் திட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம்

செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த சேவை மையம் திட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-04 18:04 GMT

ஆய்வு கூட்டம் 

செங்கல்பட்டு மாவட்ட சமூகநலத்துறை சாா்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம் திட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்தாா்.

குடும்பம் , பணிபுரியும் இடம் , தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் வன்முறைக்கு உள்ளாகும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகளை கண்காணிக்க ஆட்சியா் தலைமையில் மாவட்ட அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களிடமிருந்து பெறப்படும் குறை களைவு மனுக்களை விரைந்து தீா்வு காண ஒவ்வொரு வருவாய் கோட்டத்தில் சாா் ஆட்சியா் / வருவாய் கோட்டாட்சியரை தலைவராகக் கொண்ட உட்கோட்ட தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் இதர சேவைகள் தடையின்றி கிடைக்க பெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான முதியோா் நலத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல சட்டம்2007-ன் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களைமேற்படி சட்டத்தின்படி பரிசீலனை செய்து இரண்டு மாத காலத்தில் உரிய தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரனீத், தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையா் பவன்குமாா் ரெட்டி, மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News