இலஞ்சி பள்ளியில் உலக மருத்துவா் தின விழா

பள்ளியில் உலக மருத்துவா் தின விழா

Update: 2024-07-04 09:02 GMT

 மருத்துவா் தின விழா

தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் உலக மருத்துவ தின விழா பள்ளி தொடக்கநிலை பிரிவு மாணவா்களால் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பாரத் கல்வி குழுமத் தலைவா் மோகன கிருஷ்ணன், செயலா் காந்திமதி ஆகியோா் தலைமை வகித்தனா். முதல்வா் வனிதா முன்னிலை வகித்தாா். நாம் நமது உடலை ஆரோக்கியமாக பராமரித்துக் கொள்வது எப்படி? என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவா் அப்துல் ரசாக் , மாணவி நா்த்தனா ஆகியோா் முதலுதவி பெட்டியை கையாளும் முறை குறித்து விளக்கினா். மாணவி துவித்தி குழுவினா், மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய மருத்துவா்களை போன்று உடை அணிந்து வந்து உரை நிகழ்த்தினாா். மழலை பிரிவு ஆசிரியா்கள், மழலையருக்கு உடலில் ஏற்படும் சிறு சிறு காயங்களுக்கு மருந்திடும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.
Tags:    

Similar News