உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு

தர்மபுரி ஆட்சியர் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.

Update: 2024-06-05 13:14 GMT

தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திடல் வளாகத்தில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவ .கி.சாந்தி, இ.ஆ.ப.  இன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தினை கொண்டாடும் விதமாக தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்றைய தினம் சுமார் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. வரும் கால சந்ததியினருக்கு வாழத்தகுதியான சுற்றுச்சூழலை விட்டுச்செல்வது நம்கடமை எனக்கருதி நெகிழி தவிர்த்தல், மரம் வளர்த்தல், மழைநீர் சேமித்தல், பொதுவாகனங்களை பயன்படுத்துதல் போன்ற சிறு சிறு மாற்றங்களை கடைபிடித்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவோம் என இவ்வுலக சுற்றுச்சூழல் தினத்தில் உறுதியேற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் உதவிப்பொறியாளர் அவர்களால் வானொலி மூலம் உரைநிகழ்த்தப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழிற்சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக தி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் தொழிற்சாலையில் ஆ.நித்யலட்சுமி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பணியாளர்களுக்கிடையே சுற்றுச்சூழல் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ் குமார் இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ.நித்யலட்சுமி.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News