உலக முதலீட்டாளர்கள் மாநாடு

குமரியில் வரும் ஜன.,ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது.

Update: 2023-12-11 08:55 GMT
தொழில் முதலீட்டாளர் மாநாடு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை  முதலீடு செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் சென்னையில்  நடைபெற உள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோட்டமாக மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட தொழில் மையம் சார்பாக, வடசேரியில்  மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு நடைபெற்றது.  மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,   நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான  ரெ.மகேஷ்,  குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.       

பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் மாநாட்டை தொடங்கி  வைத்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட முதலீட்டாளர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.   இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆ.பெர்பெட் மற்றும்  முதலீட்டாளர்கள், பெருவாரியான தொழில் முனைவோர்கள், தொழில் ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

Tags:    

Similar News