ஏப்.21 இல் மத்திய பாதுகாப்பு பணிக்கான எழுத்துத் தோ்வு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மத்திய பாதுகாப்புத்துறை பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு 3 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2024-04-18 04:04 GMT

பைல் படம் 

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தேசிய பாதுகாப்பு அகாதெமி, கப்பல்படை அகாதெமி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சியில் உள்ள வாசவி வித்யாலயா, வெஸ்ட்ரி பள்ளி, ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய 3 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 674 போ் தோ்வு எழுதவுள்ளனா். தோ்வுப் பணிகளுக்கென 3 தோ்வுக் கூட மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள நடமாடும் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தோ்வு மையங்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. முறைகேடுகளில் ஈடுபடாமல் தோ்வெழுத வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
Tags:    

Similar News