ஏற்காடு: விபத்து எதிரொலி - தீவிர சோதனை

ஏற்காடு மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 5 பேர் பலியான விபத்தின் எதிரொலியாக ஏற்காடு செல்லும் வாகனங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Update: 2024-05-02 06:17 GMT

சோதனை மேற்கொண்ட போலீசார்

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று முன்தினம் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து நேற்று காலை ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஏற்காட்டுக்கு செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி டிரைவரின் தகுதி, எத்தனை ஆண்டுகளாக வாகனங்களை இயக்கி வருகிறார்? என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தனர். மேலும் வாகனங்களில் இருக்கை வசதி விவரங்கள், முறையாக இருக்கையில் அமர்ந்து செல்கிறார்களா? உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டனர். அதன்பிறகு தான் வாகனங்களை ஏற்காட்டுக்கு செல்ல போலீசார் அனுமதிக்கின்றனர்.
Tags:    

Similar News