வண்டல் மண், களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம் !

கண்மாய், குளங்களில் வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-07-05 14:34 GMT

கண்மாய், குளங்களில் வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயப் பணி மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்கு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 511 கண்மாய் மற்றும் குளங்களில் வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அழைப்புவிடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் தாம் வசிக்கும் வட்டத்துக்கு உட்பட்ட நீர்நிலைகளில் இருந்து மண் எடுக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.பின்னர் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று தங்களது சொந்த செலவில் வண்டல் மண், களிமண் எடுத்துக் கொள்ளலாம். விவசாய பயன்பாட்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது நிலம் தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்கள் வருவாய் துறையினரால் சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய வட்டாட்சியர் அனுமதி வழங்குவார்.

மண்பாண்டத் தொழில் பயன்பாட்டுக்கு விண்ணப்பம் செய்யும் மண்பாண்டத் தொழிலாளர்கள், மண்பாண்டத்தொழிலின் உண்மைத் தன்மை சான்று மற்றும் வசிப்பிடம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சான்று அளிக்க வேண்டும். விவசாயப் பயன்பாட்டுக்கு நன்செய் நிலமாக இருந்தால் ஒரு நபருக்கு ஏக்கருக்கு 75 கனமீட்டரும், புன்செய் நிலமாக இருந்தால் ஒரு நபருக்கு ஏக்கருக்கு 90 கனமீட்டரும், மண்பாண்டம் செய்யும் நபருக்கு 60 கனமீட்டர் என்ற அளவிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.

Tags:    

Similar News