கேம் விளையாடுவதை தடுத்த பெற்றோர் – மகன் செய்த விபரீத செயல்

கன்னியாகுமரி மாவட்டம்,குளச்சல் பகுதியில் செல்போனில் கேம் விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-05 01:13 GMT
சிறுவன் தற்கொலை

குமரி மாவட்டம் , குளச்சல் அருகே குழந்தை ஏசு காலனியை சேர்ந்தவர் சகாய வினோ மகன் பிளின்டாப் (16). குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை பிளின்டாப் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துடன் செல்போனை பிடுங்கிக் கொண்டனர். பின்னர் பெற்றோர் ஆலய விழாவில் கலந்து கொள்வதற்கு வெளியே புறப்பட்டு சென்று விட்டனர்.

பிளின்டாப் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் இரவு ஆலயத்தில் இருந்து வந்த பெற்றோர், வீடு பூட்டி கிடந்தை கண்டு பதட்டம் அடைந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிளின்டாப் அறையில் மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கு போட்டு இறந்து கிடந்ததை கண்டு கதறினார்.

இது குறித்து குளச்சல் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பிரச்சனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News