ஆலங்குடி அருகே விஷம் குடித்த வாலிபர் பலி!

ஆலங்குடி அருகே உள்ள பெரியாளூர் மேற்கு பகுதியில் விஷம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2024-04-08 12:09 GMT

ஆலங்குடி அருகே உள்ள பெரியாளூர் மேற்கு பகுதியில் விஷம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்.

ஆலங்குடி அருகே உள்ள பெரியாளூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் யோகராஜ்(30). சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி. கிடந்தார். அருகில் இருந்தவர்கள் யோகராஜை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News