நன்செய் இடையாறில் இளம் பெண் தற்கொலை

பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையாறில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-04 18:00 GMT

தற்கொலை 

பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (50). இவரது மகள் பிரியதர்ஷினி (22). இவருக்கும் பெற்றோர்களுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததால் பிரியதர்ஷினி மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளாராம்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை பிரியதர்ஷினியின் பெற்றோர்கள் தூங்கி எழுந்து பார்த்த போது பிரியதர்ஷினி வீட்டில் உள்ள விட்டதில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது‌ குறித்து அவரது தந்தை பழனிச்சாமி வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரியதர்ஷினியின் உடலை வேலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News