போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீண்டும் கைது

தென்காசி மாவட்ட, ம் புளியங்குடி அருகே திருமணம் செய்வதாகக் கூறி சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Update: 2024-05-31 11:32 GMT
புளியங்குடி அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீண்டும் கைது

புளியங்குடி, சிந்தாமணியைச் சோ்ந்த நாராயணன் மகன் சிவநாராயணன் (21). பிளஸ் 2 முடித்துள்ள இவா், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அப்பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சிவநாராயணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். இவா் ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News