துணிக்கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு பகுதியில் துணிக்கடை உரிமையாளர் மீது தாக்குதல் ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-09 13:35 GMT

கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த லோகநாதன் தெருவை சேர்ந்த ஏ.பாசில் என்பவர் துணிக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் பெரிய செங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்பவரது மனைவி ஆஷா (21) வேலை செய்து வரும் நிலையில் கணவர் ராகுல் கடைக்குள் நுழைந்து கடை உரிமையாளர் பாசிலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செய்யாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுலை கைது செய்தனர்.
Tags:    

Similar News