மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது

பல்லடம் அருகே மூதாட்டியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-02 01:06 GMT

பல்லடம் அருகே மூதாட்டியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது! பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் காமாட்சி அம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 62).இவரது வீடு அருகே வசிப்பவர் சுரேஷ் (44). இவர்களுக்குள் வீட்டின் முன்பு குப்பை கிடப்பது, வாசலில் தண்ணீர் தெளிப்பது போன்ற பிரச்சனைகளால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக புகாரின் பேரில் பல்லடம் போலிசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News