தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே ஆமூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த வாலிபரை வாத்தலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-23 06:17 GMT

காவல்துறை விசாரணை


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாத்தலை காவல் உதவி ஆய்வாளர் மேனகா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆமூர் பகுதியில் வாலிபர் ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை பிடித்த காவல் உதவி ஆய்வாளர் மேனகா அவரிடம் விசாரணை செய்ததில் முசிறி தாலுகா ஆமூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் 34 வயதான வெங்கடேசன் என தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் அவரிடம் 2 லாட்டரி இரண்டு லாட்டரி சீட்டுகள் பணம் ரூ. 350 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News