திண்டிவனம் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டிவனத்தில் பெண் தூய்மை பணியாளரின் தங்க செயினை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து செயின் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-18 05:27 GMT

பைல் படம் 

விழுப்புரம் கல்லூரி சாலையைச் சோ்ந்தவா் கங்கை அமரன் மனைவி அங்காளம்மன் (40). திண்டிவனம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலைப் பாா்த்து வருகிறாா். இவா், கடந்த ஜூன் 15-ஆம் தேதி திண்டிவனம், ஜெயபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் மொபெட்டில் வந்த நபா், அங்காளம்மன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து திண்டிவனம் வட்டம், எண்டியூா் முருகா நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் காா்த்திக்கை (35) கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து தங்கச் சங்கிலி, மொபெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
Tags:    

Similar News