பெண் கவுன்சிலர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

ராஜாக்கமங்கலம் அருகே பெண் கவுன்சிலர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

Update: 2024-04-27 04:51 GMT

 நகை திருடிய வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே தெற்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சுதா நேசலி. இவர் ராஜாக்கமங்கலம் ஊராட்சி 2-ம் வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார். சம்போதனம் சுதா நேசலி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார்.  சாவியை வீட்டில் ஒரு இடத்தில் வைத்துவிட்டு சென்றார். இதற்கிடையே சுதா நேசலின் கணவர் ராஜேந்திரன் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இது குறித்து ராஜாக்கமங்கலம்  போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி,  நகையை திருடி சென்றது  அதே  பகுதி  மாசாணமுத்து என்ற ரகு (33) என்பது தெரிய வந்தது. சுதா நேசலின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சாவியை வைத்து விட்டு சென்றதை தெரிந்து கொண்ட மாசாணமுத்து அந்த சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்த நகையை திருடி சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் கைது செய்து, ஆறு பவுன் நகைகளை மீட்டனர்.
Tags:    

Similar News