டூவீலரை களவாட முயன்ற இளைஞர் கைது

கரூரில் பஸ் ஸ்டாண்ட் அருகே நள்ளிரவில் டூவீலரை களவாட முயன்ற இளைஞர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-07 13:16 GMT

பஸ் ஸ்டாண்ட் அருகே நள்ளிரவில் டூவீலரை களவாட முயன்ற இளைஞர் கையும் களவுமாக கைது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தளவாபாளையம், பஜனைமட தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராமகிருஷ்ணன் வயது 40. இவர் கரூர் பேருந்து நிலையம் பகுதியில் செயல்படும் பாலாஜி மெஸ் நிறுவனத்தில் சப்ளையராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான பஜாஜ் பல்சர் வாகனத்தை ஜூன் 6-ம் தேதி இரவு பணி முடிந்த பிறகு, பாலாஜி மெஸ் அருகே நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.

பிறகு நள்ளிரவில் ஒரு மணிக்கு அங்கு வந்த, கரூர், வெங்கமேடு, பழனியப்பா தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சீனிவாசன் வயது 20 என்பவர், ராமகிருஷ்ணன் நிறுத்தி இருந்த பஜாஜ் பல்சர் வாகனத்தை களவாட முயன்று உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால், சம்பவ இடத்துக்கு வந்த ராமகிருஷ்ணன், டூ வீலரை களவாட முயன்ற ஸ்ரீநிவாசனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், களவாட முயன்ற ரூபாய் 65 ஆயிரம் மதிப்புள்ள வாகனத்தை மீட்டு ஸ்ரீனிவாசனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News