ஏடிஎம் கார்டு மூலம் பணம் சுருட்டிய வாலிபர் கைது

திண்டுக்கல்லில் முதியோர்களின் ஏடிஎம் கார்டு மூலம் பல லட்சத்தை சுருட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-17 06:43 GMT

பைல் படம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பல்லடம், காங்கேயம், திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியோர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து ஏடிஎம் கார்டை வைத்து பணம் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் மடவூர் புகையிலைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
Tags:    

Similar News