சிறுமி கடத்தல் – வாலிபர் போக்சோவில் கைது

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-14 05:54 GMT

கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே 15 வயது சிறுமி மாயமானார். இது குறித்து உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், சிறுமியை சென்னை, பூந்தமல்லியை சேர்ந்த சரவணன் மகன் திருமலை, 19; என்பவர் கடத்திச் சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் சென்னை சென்று சிறுமியை மீட்டனர். மேலும், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, திருமலையை நேற்று கைது செய்தனர்.

Tags:    

Similar News