திருட்டு வழக்கில் வாலிபர் கைது

ஆற்காடு பகுதியைச் சேர்ந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Update: 2024-06-22 07:57 GMT

திருட்டு வழக்கில் வாலிபர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கோணன் காலனி பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற அஜித் குமார் (24). இவர் 8 திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியில் வந்த இவர் மீது திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இது சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்த அஜித்குமாரை ஆற்காடு டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News