வாலிபர் தற்கொலை
திண்டிவனம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-06-28 01:36 GMT
தற்கொலை
திண்டிவனம் வட்டம், கட்டளை, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் ராமு (30), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கீா்த்தனா என்ற மனைவி உள்ளாா்.உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ராமு செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
இதையடுத்து, அவரை உறவினா்கள் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.