வேலை இல்லாததால் வாலிபர் தற்கொலை

திருப்பத்தூர் ஆத்துமேடு கிராமத்தில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-01 06:21 GMT

தற்கொலை 

திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஆத்து மேடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மகன் பார்த்திபன் வயது 26 இவர் பி. இ. பட்டதாரி ஆவார் இவர் வேலை கிடைக்காமல் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாமல் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு பின்புறம் உள்ள மரத்தின் கிளையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை குறித்து அவருடைய பெற்றோர் திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் பிணத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது‌.

Tags:    

Similar News