தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி!

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-24 11:42 GMT

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் மகன் மரிய அந்தோணி (40). கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பரான அப்துல் என்பவருடன் பூபாண்டிபுரம் பகுதியில் சென்றாராம்.

அப்போது அங்கு தேங்கியிருந்த மழைநீரில் மின் வயர் அறுந்து கிடந்துள்ளது. அதில் காலை வைத்த மரிய அந்தோணி, உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News