ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்த வட மாநிலத்தவைச் சார்ந்த இளைஞர் கைது

விருதுநகர் மேற்குரத வீதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்த வட மாநிலத்தவைச் சார்ந்த இளைஞர் கைது

Update: 2024-02-25 07:22 GMT

அசாருதீன் சாகா 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சார்ந்தவர் கணேச பாண்டியன். இவர் கடந்த 34 வருடங்களாக ஸ்டேட் பேங்கில் பல கிளைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது தற்காலிக பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் விருதுநகரில் இருந்த பொழுது எஸ்பிஐ ஏடிஎம் யாரோ உடைத்து திருட முயற்சிப்பதாக தொலைபேசி மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் அந்த சென்று பார்த்த பொழுது மேற்கு வங்கத்தைச் சார்ந்த அசாருதீன் சாகா என்பவர் செங்கலால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. விசாரித்ததில் தான் பணம் எடுக்க வந்ததாகவும் கை ரேகை வைத்தும் பணம் வராத காரணத்தினால் செங்கலால் இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க போவதாகவும் கூறியுள்ளார். இதை அடுத்து அவரை பிடித்த கணேச பாண்டியன் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். அங்கு வந்த பஜார் போலீசார் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்த வட மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை கைது செய்தனர்.
Tags:    

Similar News