அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்!

அரக்கோணத்தில் இளைஞர்கள் எம்எல்ஏ ரவி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் .

Update: 2024-05-20 15:10 GMT

அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பணப்பாக்கம் பகுதியில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர், சு.ரவி எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்று, கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள், சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாசறை செயலாளர் அன்பரசன், துணை செயலாளர்கள் என்.டி.பி.தயாளன், டாக்டர். கிருபா (மருத்துவ அணி), மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஆர். ஹரிகரன், பனப்பாக்கம் பேரூராட்சி செயலாளர் எஸ்.கே.மணிவண்ணன், பனப்பாக்கம் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பார்த்தீபன், கேசவமூர்த்தி, தினகரன், வெற்றிவேல், கோகுல் மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News