மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே தோட்ட வேலையின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

Update: 2024-07-05 14:26 GMT

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே தோட்ட வேலையின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

ஆவுடையார்கோவில் அருகே செவிடன்காடு கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி மகன் விஜய்ஆனந்த் (28). இவர், இடையன்காடு கிராமத்திலுள்ள எம்எஸ்எம் சுல்தான் என்பவரின் வீட்டில் பணிபுரிந்து வந்தார். இந்த வீட்டிலுள்ள தோட்டத்தில் இருந்த கற்களைப் பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்காக இரும்பு கடப்பாரை வைத்துக்கொண்டு வேலை செய்தபோது, தரைவழியேசென்ற மின் வயர்களில் பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில் விஜய்ஆனந்த் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News