சமயபுரம் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த சிறுகனூர் அருகே நெடுங்கூரில் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.;

Update: 2024-05-24 08:53 GMT

உயிரிழந்த வாலிபர்

பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி அண்ணாசாலை தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் 21 வயதான நவீன். அதே பகுதி இந்திரா நகரை சேர்ந்த நவீனின் நண்பர்கள 21 வயதான தமிழ்வாணன் மற்றும் சச்சின்.

இவர்கள் மூவரும் மோட்டார் பைக்கில் திருச்சியில் இருந்து செஞ்சேரி நோக்கி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருதனர். அதேபோல் தேனி மாவட்டம் பாலாஜி நகரை சேர்ந்த 52 வயதான செந்தில்குமார் அரசு விரைவு பேருந்தை ஓட்டி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சிறுகனூர் அருகே நெடுங்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நவீன் ஓட்டிச் சென்ற மோட்டார் பைக் பேருந்தை முந்தி செல்ல முயன்றனர்.

Advertisement

அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியதில் நிலைத்திடுமாறி கீழே விழுந்தனர்.இதில் படுகாயம் அடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த இரண்டு நண்பர்களும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த தமிழ்வாணன் மற்றும் சச்சினை மீட்டு சிகிச்சைக்காகவும்,

விபத்தில் உயிரிழந்த நவீன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News