நித்திரவிளையில் மூதாட்டியை மிரட்டி கடையை சேதப்படுத்திய வாலிபர் கைது

நித்திரவிளையில் மூதாட்டியை மிரட்டி கடையை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-17 02:51 GMT
கைதான டிக்சன்

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காணவிளை பகுதியை சேர்ந்தவர் சுதீர் (47) இவர் வீட்டின் அருகே ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். சுதிர்  வெளியே போகும்போது அவரது தாயார் புஷ்பம் (80) என்பவர் கடையில் இருந்து வியாபாரம் செய்வது வழக்கம்.    

 நேற்று மதியம் கடையில் புஷ்பம் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த புத்திரியம் என்ற பகுதியை சேர்ந்த டிக்ஸன் (29) மூதாட்டியிடம் பிடி கேட்டுள்ளார். உடனடியாக அதற்கான பணத்தை புஷ்பம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிக்ஸன், புஷ்பத்தை தகாத வார்த்தைகள் பேசி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.    

இது சம்பந்தமாக சுதிர் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டிக்சனை கைது செய்தனர்.

Tags:    

Similar News