பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-01-12 09:54 GMT
கருங்குழி பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியில் உள்ள கூட்டுறவு நியாய விலை கடையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க பணம் ஆயிரம், அரிசி, வெள்ளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதனை பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.
Tags:    

Similar News