வேடசந்தூரில் களைக்கொல்லி சாப்பிட்டு தற்கொலை முயற்சி
By : King 24X7 News (B)
Update: 2023-12-26 10:38 GMT
மருத்துவமனை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் அருண் வயது 24. இவர் வேடசந்தூர் நேருஜி நகர் அருகே களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.