கிணற்றில் இறங்கிய சிறுவர்களை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்பு

மீட்பு

Update: 2024-07-18 01:13 GMT
முனிவாழை கிராமத்தில் புறா பிடிக்க கிணற்றில் இறங்கி, மேலே ஏற முடியாமல் தவித்த சிறுவர்களை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர். ரிஷிவந்தியம் அடுத்த முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கணேசன்,14; இவரும், இவரது நண்பர் செந்தில் மகன் கிருபா,13; என்பவரும் புறா பிடிப்பதற்காக, அதே பகுதியில் உள்ள ராமசாமி என்பவருக்கு சொந்தமான 90 அடி ஆழம் கொண்ட விளைநில கிணற்றில் நேற்று காலை இறங்கியுள்ளனர். தொடர்ந்து, கிணற்றில் இருந்து மேலே ஏற முடியாமல் தவித்து சிறுவர்கள் சத்தமிட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த ரிஷிவந்தியம் தீயணைப்பு நிலைய வீரர்கள் கமலஹாசன், முருகன், மணிபாலன், வல்லரசு, லிகத்அலி ஆகியோர் நேற்று காலை 12.10 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று, கிணற்றில் இறங்கி கயிறு மூலம் கணேசன், கிருபாவை பத்திரமாக மீட்டனர்.

Similar News