ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதலே விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்

ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதலே விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

Update: 2024-07-21 09:04 GMT
ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதலே விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் .இந்த கோவிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதாக சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் தமிழக மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். சதுரகிரி கோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். மாதந்தோறும் பிரதோஷம் , அமாவாசை , பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு கடந்த 19 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆடிமாத பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர், மதுரை ,திருச்சி , திண்டுக்கல் , சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தானிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர் .பின்பு காலை 6 மணிக்கு சதுரகிரி கோயில் நுழைவு வாயில் கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்பு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்..

Similar News