ஆடிப்பெருக்கு வந்தது முன்னே காவிரியில் தண்ணீர் வந்தது பின்னே

காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது காவிரி நீர். சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி காவிரி அன்னையை வரவேற்று நொடிக்கு 1100 கன அடி தண்ணீரை நீர்வள ஆதாரத்துறையினர் திறந்து விட்டனர்

Update: 2024-08-03 17:56 GMT
மேட்டூர் அணை நிரம்பியதால் உபரிநீர் காவிரியில் கடந்த 28ஆம்தேதி திறக்கப்பட்டது.   கொள்ளிடம் ஆற்றில்  திறந்து விடப்பட்ட ஒரு லட்சத்து 64 ஆயிரம் கன அடி காவிரி நீர் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்து கடலில் கலந்து வருகிறது. இந்நிலையில் கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரிநீர் மயிலாடுதுறை மாவட்டம் வந்து சேராததால் இன்று நீர் நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாட முடியாமல் பொதுமக்கள் வேதனை அடைந்தன ர். இந்நிலையில் இரவு 8 .10 மணியளவில் காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்ட எல்லையை வந்தடைந்தது. மாவட்ட எல்லையான குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின்  தலைப்பு பகுதியில் உள்ள முதல் கதவணை உள்ள நீர் தேக்கத்திற்கு  வந்து சேர்ந்தது. நீர்வள ஆதாரத்துறையினர் காவிரி அன்னையை வரவேற்று  பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வினாடிக்கு 1100 கன அடி தண்ணீரை திறந்து விட்டனர்.  மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நிகழாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 94 ஆயிரம் ஏக்கரில் குறுவை பயிர் சாகுபடி  செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Similar News