திருவாவடுதுறையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் கிராமத்தில் 'மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம்:- எம்எல்ஏ நிவேதாமுருகன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Update: 2024-08-06 14:10 GMT
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்தில் உள்ள திருவாவடுதுறை, திருவாலங்காடு, கருப்பூர், மேக்கிரிமங்கலம், மாதிரிமங்கலம் மற்றும் பழையகூடலூர் ஆகிய 6 ஊராட்சிகளுக்கு 'மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் திருவாவடுதுறை கிராமத்தில் நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, கூட்டுறவுத் துறையின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு குழுக் கடனுக்கான காசோலை, மின்சார வாரியத்தில் பெயர் மாற்றம் செய்து விண்ணப்பித்த பயனாளி ஒருவருக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணை உள்ளிட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News