கலைஞரின் ஆறாவது ஆண்டு நினைவுதின பேரணி திமுக சார்பில் நடைபெற்றது

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆறாவது நினைவு தின அஞ்சலி பேரணி நடைபெற்றது.திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார் நகர ஒன்றிய மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-08-07 06:07 GMT
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி பேருந்து நிலையம் பகுதியில் கலைஞரின் உருவப் படத்துக்கு மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினர். கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை கூரைநாடு பகுதியில் இருந்து அமைதி பேரணி துவங்கியது. திமுக மாவட்ட செயலாளரும் , எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் மெழுகுவர்த்தி ஏத்தி மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்று நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டது.

Similar News