கறம்பக்குடி அருகே காக்கைக்கோன் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை(58). இவர் நேற்று மஞ்சுவிடுதி கடைவீதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சுமைஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலிஸார் இறந்த செல்லத்துரையின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.