புதுக்கோட்டை மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் கழிவுநீர் வாரியில் கழிவு நீர் செல்லாமல் துர்நாற்றம் வீசுவதை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் பொதுமக்கள் அளித்த புகார் அடிப்படையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கழிவுநீர் செல்வதற்கான வழிவகை செய்யுமாறு மாநகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம் அவர்களிடம் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் நகர் நல அலுவலர் பாஸ்கரன் உடன் இருந்தார்.