உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நிலக்கோட்டை வருவாய் வட்டாச்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-08-21 18:53 GMT
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, அவர்கள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நிலக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது 31.01.2024 அன்று திண்டுக்கல் மேற்கு வட்டத்திலும், 21.02.2024 அன்று நத்தம் வட்டத்திலும், 19.06.2024 அன்று வேடசந்துார் வட்டத்திலும், 24.07.2024 அன்று கொடைக்கானல் வட்டத்திலும் செயல்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 21.08.2024 நிலக்கோட்டை வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார். தொடர்ந்து, நிலக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு, அலுவலர்களின் ஆய்வு அறிக்கையை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குர் திருமதி திலகவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன் உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Similar News