கொல்கத்தா பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் கொலை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

Update: 2024-08-21 19:05 GMT
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் 31 வயது பயிற்சி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக சஞ்சய் ராய் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மருத்துவக்கல்லூரியின் முதல்வர் சந்தீப் கோஷ் பதவியை ராஜினாமா செய்தபோதிலும் அவர் இச்சம்பவம் குறித்த முக்கிய ஆதாரங்களை அழித்து விட்டதாகவும். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், வழக்கில் மெத்தனம் காட்டும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவைக கண்டித்தும் திண்டுக்கல் தலைமை தாபல் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் பங்கேற்றனர். வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் முகேஷ் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் பாலாஜி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ராணி, மாவட்டச்செயலாளர் பாப்பாத்தி, மாவட்டத் தலைவர் சுமதி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் தீபக்ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Similar News