அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீதான விசாரணை புதுகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி (பொறுப்பு) வசந்தி முன்னிலையில் வந்தது. வழக்கின் விசாரணைக்கு விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால், இவ்வழக்கின் விசாரணையை செப்.29ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.