திருவட்டாறு அருகே வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பெண் கைது

கன்னியாகுமரி

Update: 2024-08-31 14:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் திஜின் (22) இவர் பிஎஸ்சி (அக்ரி) படித்துள்ளார். இவர் அரசு வேலை தேடி வந்தார்.  அப்போ அண்டு கோடு  பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராஜன் மற்றும் சிதறால் பகுதியை சேர்ந்த சகுந்தலா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது திஜினுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, முன்பனமாக 8 லட்சம் பெற்றுள்ளனர்.       பின்னர் நேர்முகத்தேர்வு என்று பல இடங்களுக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு ரயில்வே வேலைக்கான பணி அணையை கொடுத்து இருக்கிறார்கள். இதை நம்பி வேலைக்கு சென்ற போது அது போலி அரசு உத்தரவு என்று தெரிய வந்தது. அதன்பின் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திஜின் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவதரையும் தேடி வந்த நிலையில் சகுந்தலாவை நேற்று  கைது செய்தனர். மேலும் தலைமறைவான முன்னாள் ராணுவ வீரர் ராஜனையும் தேடி வருகின்றனர்.

Similar News