துறைமுகத்திற்கு சிந்து கேசரி என்ற நீர்மூழ்கி கப்பல் வருகை!

தூத்துக்குடி துறைமுகத்துக்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான சிந்து கேசரி என்ற நீர்மூழ்கி கப்பல் வருகை

Update: 2024-09-02 05:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு இந்திய கடற்படையின் ஒரு பிரிவான ஐஎன்எஸ் கட்டபொம்மனுக்கு சொந்தமான சிந்து கேசரி என்ற நீர்மூழ்கி கப்பல் வந்துள்ளது. துறைமுகத்தில் முதலாவது தளத்தில் அக்கப்பல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 72.25 மீட்டர் நீளமும், 12.8 மீட்டடர் அகலமும், 7.1 மீ உயரமும் கொண்ட அக்கப்பலின் மொத்த எடை 2442 டன் ஆகும். சிந்து கேசரி நீர்மூழ்கி கப்பல் கடந்த 31 ம் தேதி துாத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் 6 ம் தேதி வரை இங்கு நிறுத்தபட உள்ளதாகவும் அவர்கள் கூறினர். இந்த நீர்மூழ்கி கப்பல் ரோந்து பணியில் இருக்கும்போது 21 நாட்களுக்கு முறை அருகேயுள்ள துறைமுகத்துக்கு செல்வது வழக்கம். என்றும் அதன்படி, தற்போது துாத்துக்குடி துறைமுகத்துக்கு வந்துள்ளது. கப்பலுக்கு தேவையான எரிபொருள், ஊழியர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு வந்துள்ள நீர்மூழ்கி விரைவில் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும். மற்ற நடவடிக்கைகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News