மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தராம்எச்சூரி மறைவுக்கு மௌன அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பல்வேறு கட்சியினர் மௌன ஊர்வலமாக சென்று செவ்வணக்கம் செலுத்தினர்

Update: 2024-09-13 11:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மயிலாடுதுறையில்மௌன ஊர்வலமாக சென்று  செவ்வணக்கம் செலுத்தினர். மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கூறைநாடு காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு  பேருந்து நிலையம் அருகே கிட்டப்பங்காடியில் மௌன ஊர்வலம் நிறைவுற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி பிளக்ஸ் பேனர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விவசாய சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News