கணவன் அடகு வைத்து செலவு செய்த நகை ரசீதை கேட்ட மனைவிக்கு அடி உதை

மயிலாடுதுறை அருகே நாராயண மங்கலத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி திவ்யா 30 இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது , பன்னீர்செல்வம் இந்த வேலைக்கு செல்லாமல் மனை நகை அடகு வைத்து விளையாட செல்வதாக செலவு செய்துள்ளார் அந்த ரசீதை கேட்டதற்கு அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

Update: 2024-09-15 18:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை அருகே உள்ள நாராயணமங்களம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி திவ்யா (30). இவர் தனியா நிறுவனத்தில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். கணவர் பன்னீர்செல்வம் எந்த வேலைக்கும் செல்லாமல் மனைவி நகைகளை வாங்கி அடகு வைத்து வெளிநாடு செல்வதாக கூறி செலவழித்துள்ளார். இதை கேட்டதால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதே பகுதியில் திவ்யாபிரிந்து வாழ்ந்து வருகிறார். கணவர் அடகு வைத்த நகைகளை மீட்பதற்கு அவரது வீட்டுக்குச் சென்று ரசீதுகளை கேட்டுள்ளார். ஏற்கனவே கணவனுடன் வாழாமல் பிரிந்து வாழ்வதால் இவர் மீது கோபத்தில் இருந்த அவர் கணவர் பன்னீர் மற்றும் பன்னீரின் 2 சகோதரிகள் மற்றும் குமார் என்பவர் சேர்ந்து திவ்யாவை திட்டி அடித்து உதைத்து அவரை மானபங்க படுத்தி அவமானப்படுத்தியுள்ளனர், காயம் அடைந்த திவ்யா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . அவர் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் பன்னீர்செல்வம் அவரது இரண்டு சகோதரிகள் மற்றும் குமார் ஆகிய நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

Similar News