பெண்ணை தாக்கியவர்கள் கைது

கைது

Update: 2024-09-27 03:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கச்சிராயபாளையம் அடுத்த சடையம்பட்டு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவஒளி மனைவி ஞானவள்ளி, 41. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சிவக்குமார், 56, என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் காலை தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அங்கு வந்த சிவக்குமார் தனது மனைவி ஜீவா உடன் சேர்ந்து ஞானவள்ளியை தாக்கினார். புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமார் மற்றும் ஜீவா ஆகியோரை கைது செய்தனர்.

Similar News