வண்டல் மண் கடத்தியவர் கைது போலீசார் விசாரணை

விசாரணை

Update: 2024-09-27 03:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியலாளர் ரகுநாத்குமார் நேற்று தியாகதுருகம் - பல்லகச்சேரி சாலையில் வாகன ரோந்து சென்றார். அவ்வழியே சென்ற லாரியை (டி.என்., 69, ஏ. டபுள்யூ., 0367) மடக்கி சோதனை நடத்தியதில் பல்லகச்சேரி சித்தேரியில் இருந்து கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரகுநாத்குமார் தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்த மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன்,28; என்பவரை கைது செய்தனர்.

Similar News