கபடி போட்டியில் மோதல் மூன்று பேர் மீது வழக்கு பதிவு

பதிவு

Update: 2024-09-27 03:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கச்சிராயபாளையம் அடுத்த க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் மகன் கண்ணதாசன், 25. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் பிரேம்குமார், கணேசன் மகன் ஆளவந்தான் ஆகியோர் கண்ணதாசனிடம் தகராறு செய்து, அவரை தாக்கினர். புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் பிரேம்குமார், ஆளவந்தான், கவியரசன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News