குளித்தலையில் இந்து முன்னணி சார்பில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு

குளித்தலை ஆஞ்சநேயர் கோவில் முன்பு கோஷம் எழுப்பிய இந்து முன்னணியினர்

Update: 2024-09-28 05:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பதியில் லட்டில் மாட்டுக் கொழுப்பு விவகாரத்தில் கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் குளித்தலை ஆஞ்சநேயர் கோவில் முன்பு தேங்காய் உடைத்து முறையிடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. சனிக்கிழமை ஏகாதசி தினத்தில் கோவிலின் புனிதம் கெடுத்த அனைத்து கயவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டியும் கோவிலின் புனிதம் காக்கவும் ஆஞ்சநேயரை மனதார வழிபட்டு சூரை தேங்காய் உடைத்தனர். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் துரை, கோபி, கார்த்திக், செந்தில், ராஜமாணிக்கம், கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News